ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தை திமுக கைப்பற்றியது. இதையடுத்து முதலாவது ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. ஒன்றிய குழு தலைவர்  கருணாநிதி தலைமை வகித்தார். துணை தலைவர் மாலதி போஸ்கோ வரவேற்றார். மாவட்ட கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, பாலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்து சுந்தரம், அமல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில் ஒன்றியத்தின் வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. முன்னதாக அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். தொடர்ந்து அனைத்து ஒன்றிய கவுன்சிலர்களுக்கு சால்வை அணிவிக்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் கோபால், மாவட்ட துணை செயலாளர்கள் பொடவூர் ரவி, குண்ணம் முருகன், ஜார்ஜ், சத்யா மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் ஒன்றிய குழு தலைவர், துணை தலைவர் மற்றும் திமுக கவுன்சிலர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்….

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்