ஒன்றிய அரசை கண்டித்து வேலாயுதம்பாளையத்தில் இ.கம்யூ., பொதுக்கூட்டம்

வேலாயுதம்பாளையம்: ஒன்றிய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸட் கட்சி சார்பில் நாடு தழுவிய மாவட்ட அளவிலான பிரச்சார கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்திய கம்யூனிஸ்ட் கரூர் மாவட்ட சார்பில் புகளூர் நகராட்சி கரூர் செல்லும் சாலையில் உள்ள மலை வீதி ஜீவா திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் தனபால் வரவேற்றார். முன்னாள் மாவட்டச் செயலாளர் ரத்தினம், மாவட்ட துணை செயலாளர் மோகன் குமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளர் நாட்ராயன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஒன்றிய அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றப்படவில்லை. வரும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும். ஒன்றிய அரசின் போக்கை கண்டித்தும் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கண்டன உரை நிகழ்த்தினர் கூட்டத்தில், இந்திய கம்யூ., மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன் உட்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கரூர் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து நன்றி கூறினார்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு