ஒன்றிய அரசை கண்டித்து நாளை மறியல் போராட்டம் திருவாரூரில் மா.கம்யூ., கட்சியினர் வாகன பிரசாரம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில், ஒன்றிய அரசை கண்டித்து நாளை நடைபெற உள்ள மறியல் போராட்டத்தை ஒட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வாகன பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசின் விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்வைத்தும், ஒன்றிய அரசை கண்டித்தும் திருவாரூர் மாவட்டத்தில் நாளை (செப்.7) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், திருவாரூர், திருத்துறைப்பூண்டியில் ரயில் மறியல் போராட்டமும், 8 இடங்களில் தபால் நிலையம் முன்பும் என மொத்தம் 10 இடங்களில் போராட்டம் நடைபெற உள்ளது. இப்போராட்டம் குறித்து பொதுமக்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் என அனைவருக்கும் விளக்கி, அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு போராட்டம் வெற்றி பெற ஒத்துழைப்பு வழங்குமாறும், நேற்று முன்தினமும், நேற்றும் என 2 நாட்கள் மாவட்டம் முழுவதும் அனைத்து ஒன்றியங்களிலும் வாகனங்கள் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாநில குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் தலைமையில் நேற்று வாகன பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

Related posts

வத்திராயிருப்பு அருகே திராவிட இயக்க வரலாற்று சாதனைகள் கலை நிகழ்ச்சி

ராஜபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

ரூ.2.05 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்