ஒன்றிய அரசு பணியில் இருக்கும் பெண் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு: பிறந்த குழந்தை உயிரிழந்தால் 60 நாட்கள் சிறப்பு மகப்பேறு விடுமுறை..!!

டெல்லி: ஒன்றிய அரசு பணியில் இருக்கும் பெண் ஊழியர்களுக்கு குழந்தை பிறக்கும்போதே உயிரிழந்தால் 60 நாட்கள் வரை சிறப்பு மகப்பேறு விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஒன்றிய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒன்றிய அரசு பெண் ஊழியர்கள் கர்ப்பமடைந்த 28 வாரங்கள் முதல் குழந்தை பிறந்த சில நாட்களில் சிசு உயிரிழந்தால் சிறப்பு மகப்பேறு விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்துடன் இது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தப்பட்டதில் 60 நாட்கள் வரை சிறப்பு மகப்பேறு விடுமுறை அளிக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறந்த குழந்தை உயிரிழப்பது தாயை மன ரீதியாக நீண்ட நாள் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அதிலிருந்த மீள அவகாசம் தரும் வகையில் சிறப்பு மகப்பேறு விடுப்பு அளிக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் முதல் 2 குழந்தைகளுக்கு மட்டுமே இந்த தளர்வு பொருந்தும் என்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் பெண் ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. …

Related posts

அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு மோடி டெல்லி புறப்பட்டார்!

அசாம் மாநிலம் திமா ஹசோ பகுதியில் நேற்றிரவு லேசான நிலநடுக்கம்!

மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறு; அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்