ராசிபுரம்: நாமக்கல் மாவட்ட பகுதிகளில், பாஜ ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று மக்கள் ஆசி யாத்திரை மேற்கொண்டார். அப்போது, தனது சொந்த ஊரான ராசிபுரம் பகுதிக்கு அவர் வந்தார். முன்னதாக அவர் வருகையை எதிர்த்து, ராசிபுரம் கடைவீதி பகுதியில் ஆதித்தமிழர் பேரவையினர் கருப்பு கொடியேந்தியபடி கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராசிபுரம் போலீசார், அனுமதியின்றி போராட்டம் நடத்திய ஆதித்தமிழர் பேரவையினரை கைது செய்தனர்….