ஒட்டன்சத்திரம் கல்லூரியில் தொழில் முனைவோர் பயிற்சி

ஒட்டன்சத்திரம், மே 9: ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு புத்தாக்க நிறுவனம் மற்றும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் இணைந்து கல்லூரி படிப்பை முடித்த இறுதியாண்டு மாணவிகளுக்கு சுயதொழில் முனைவோர் பயிற்சி முகாமை நடத்தியது. கல்லூரி தாளாளர் வேம்பணன் தலைமை வகித்தார். முகாமில் சுயதொழில்கள் குறித்தும், அரசின் கடனுதவிகள் குறித்தும் மாணவிகளுக்கு எடுத்து கூறினர். இதில் கல்லூரியின் முதல்வர் தேன்மொழி, ஒருங்கிணைப்பாளர் முருகேஸ்வரி, தமிழ் துறை தலைவர் முருகேஸ்வரி, பயிற்சியாளர் கிருஷ்ணகுமார், அர்ச்சனா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் செல்வமணி நன்றி கூறினார்.

Related posts

ரயில் நிலையத்தில் கடை வைத்து தருவதாக பாஜ நிர்வாகி ₹2.5 லட்சம் மோசடி பெண் தற்கொலைக்கு முயற்சி : கடிதம் எழுதி வைத்ததால் பரபரப்பு

போதையில் தங்கையை ஆபாசமாக திட்டியதால் ஆத்திரம்; மீன் பண்ணை ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை: உடன் பணியாற்றிய வாலிபர் கைது

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வசூலிப்பு; மும்மடங்கு லாபம் தருவதாக கூறி 1,930 பேரிடம் ₹87 கோடி மோசடி: 25 பேர் ஏஜென்ட்டுகளாக செயல்பட்டது அம்பலம்