ஒட்டன்சத்திரம், ஆக. 31: ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. நகர்மன்ற துணை தலைவர் வெள்ளைச்சாமி தலைமை வகித்தார். ஆணையாளர் மீனா முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் நகராட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் பொறியாளர் சக்திவேல், மேலாளர் உமா காந்தி, கணக்காளர் சரவணன், இளநிலை உதவியாளர் ஈஸ்வரன், சுகாதார ஆய்வாளர் ராஜ்மோகன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஒட்டன்சத்திரத்தில் நகர்மன்ற கவுன்சில் கூட்டம்
previous post