ஒட்டன்சத்திரத்தில் நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் ஆய்வு

ஒட்டன்சத்திரம், ஜூலை 6: ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு உட்பட்ட சின்னக்குளம் நுண் உரக்குடில் மையம், பஸ் நிலைய அரசு உணவகம், சத்யாநகர், ஏ.பி.பி. நகர், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதுரை மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் சரவணன் நேரில் ஆய்வு செய்து மரக்கன்றுகளை நடவு செய்தார். பின்னர் அவர் நகராட்சி அலுவலக பணிகளையும் ஆய்வு செய்தார். உடன் நகர்மன்ற தலைவர் திருமலைசாமி, துணை தலைவர் வெள்ளைச்சாமி, ஆணையாளர் (பொ) சக்திவேல், இளநிலை உதவியாளர் ஈஸ்வரன், மேலாளர் உமாகாந்தி, கணக்கர் சரவணன், வருவாய் ஆய்வாளர் சங்கீதா, துப்புரவு ஆய்வாளர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் இருந்தனர்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து