Saturday, June 29, 2024
Home » ஒகேனக்கல் சாலையோரம் நடமாடும் ஒற்றை யானை

ஒகேனக்கல் சாலையோரம் நடமாடும் ஒற்றை யானை

by Francis

 

பென்னாகரம், பிப்.2: ஒகேனக்கல் சாலையோரத்தில் உணவு, தண்ணீர் தேடி ஒற்றை யானை சுற்றி வருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்து ஒகேனக்கல் வனப்பகுதியில் ஏராளமான வன உயிரினங்கள் உள்ளது. இந்நிலையில், கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே, ஒகேனக்கல் வனப்பகுதியில் உள்ள மரங்கள் காய்ந்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள ஓடைகளில் தண்ணீர் வற்றி விட்டது. வனப்பகுதியில் போதிய உணவு கிடைக்காததால், வன உயிரினங்கள் வனப்பகுதியை ஓட்டியுள்ள சாலைக்கு வந்து உணவு தேடி அலைகின்றன. மேலும், வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலையை கடந்து, காவிரி ஆற்றுக்கு சென்று தண்ணீர் குடித்து வருகின்றன.

இந்நிலையில் ஒகேனக்கல் வனப்பகுதிக்குட்பட்ட சாலையில், ஒற்றை ஆண் யானை ஒன்று, சாலை ஓரங்களின் அருகேயுள்ள புளிய மரங்களை உடைத்து உண்பதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். ஒகேனக்கல் வனச்சரகத்தில் உள்ள வன அலுவலர்கள், வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலைகளில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும், வனவிலங்குகள் சாலையை கடக்காத படி, வனப்பகுதிக்குள் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப வேண்டும் எனவும் வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

two × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi