தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மேலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு ஒரு லட்சத்து 15 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை 78 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து மதியம் 85 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருந்த நிலையில் மாலை 4:20 மணி அளவில் ஒரு லட்சம் கனஅடியாகவும் தற்போது நிலவரம் படி ஒரு லட்சத்து 15 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்துள்ளது….