Monday, July 1, 2024
Home » ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு ஆதரவான நிலையை இந்திய அரசு எடுக்கும் என்ற நிலைப்பாட்டுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்..!

ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு ஆதரவான நிலையை இந்திய அரசு எடுக்கும் என்ற நிலைப்பாட்டுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்..!

by kannappan

சென்னை: ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு ஆதரவான நிலையை இந்திய அரசு எடுக்கும் என்ற நிலைப்பாட்டுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கை போர்க்குற்றங்கள் குறித்த தீர்மானம் மீது நாளை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் நடைபெற உள்ளது. இலங்கையில் நடந்த போரில் இலங்கை அரசுப் படை மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு என இரு தரப்பினரும் மோசமான அடாவடிச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்படுகிறது. இப்போரில் குறைந்தபட்சம் 1,00,000 பேர் கொல்லப்பட்டனர்.இலங்கையில் 26 ஆண்டு காலமாக நடந்த கொடூரமான உள்நாட்டுப் போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை பொறுப்பேற்கச் செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய தீர்மானத்தை இலங்கை அரசு எதிர்கொள்கிறது. இந்த நிலையில்,  ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு ஆதரவான நிலையை இந்திய அரசு எடுக்கும் என்ற நிலைப்பாடு, இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என்று அந்நாட்டு வெளியுறவுச் செயலாளர் கூறியிருப்பதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமை மன்ற தீர்மானம் குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது தமிழகத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

You may also like

Leave a Comment

8 − three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi