ஐயப்பன் கோயில் கும்பாபிஷேக விழா

கடத்தூர், நவ.17: தா. அய்யம்பட்டியில், ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம் விழா நடந்தது. தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த தா.அய்யம்பட்டியில் ஐயப்பன் கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் மகா கும்பாபிஷேக விழா, கடந்த 15ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று அதிகாலை திருப்பள்ளி எழுச்சி, 2ம் கால பூஜை, கோபூஜை, மண்டபார்ச்சனை நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு கோயில்களில் இருந்து எடுத்து வந்த தீர்த்தங்களை, சிவாச்சாரியார்கள் கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்