Monday, July 1, 2024
Home » ஐபிஎஸ் அதிகாரிகள் 49 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

ஐபிஎஸ் அதிகாரிகள் 49 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

by kannappan

சென்னை: ஐபிஎஸ் அதிகாரிகள் 49 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாநகர காவல் ஆணையராக செந்தாமரைக்கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாநகர காவல் ஆணையராக நஜ்மல் ஹோடா நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாநகர காவல் ஆணையராக வனிதாவை நியமித்துள்ளது தமிழக அரசு. ஐபிஎஸ் அதிகாரிகள் அமித்குமார் சிங், அஸ்வின் கோட்னிஸ், பாலகிருஷ்ணன், பிரதீப்குமார், சுதாகர் ஆகியோர் பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கார்த்திகேயன், பிரதீப் ஆகியோரும் பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டனர். திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.யாக பாலகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.யாக சுதாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி சுமித் சரண் ரயில்வே ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்….

You may also like

Leave a Comment

one × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi