ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி-ராஜஸ்தான் இன்று மோதல்

மும்பை: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 34வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. டெல்லி அணி 6 போட்டிகளில் 3 வெற்றி பெற்றுள்ளது. வார்னர், பிருத்விஷா மற்றும் கேப்டன் ரிஷப் பன்ட் பேட்டிங்கிலும் கலீல் அகமது, லலித் யாதவ், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகியோர் கொண்ட பந்துவீச்சு பட்டாளம் கடந்த போட்டியில் பஞ்சாபை பஞ்சராக்கி தொங்கவிட்டது. இவர்கள் இன்று அசத்தினால் ராஜஸ்தானுக்கு அதோ கதிதான். ராஜஸ்தான் அணியை பொறுத்தவரையில் 6 போட்டியில் 4 வெற்றி (ஐதராபாத், மும்பை, லக்னோ, கொல்கத்தா), 2 தோல்வி (ஆர்சிபி, குஜராத்) கண்டுள்ளது. கடைசி போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக 217 ரன்கள் குவித்தது. பட்லர் எதிரணியினரை கதிகலங்க வைக்கிறார். படிக்கல், சாம்சன் ஓரளவுக்கு கைகொடுக்க இறுதிகட்டத்தில் ஹெட்மயர் வெளுத்து வாங்குகிறார். பந்துவீச்சில் சாஹல், பிரசித்கிருஷ்ணா, அஸ்வின் நம்பிக்கை அளிக்கின்றனர். இரு அணிகளும் பேட்டிங், பந்துவீச்சில் கலக்குவதால் இன்றைய போட்டி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் இரு அணிகளும் தலா 12 போட்டிகளில் வென்றுள்ளன….

Related posts

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரின் 2 போட்டிகளில் விளையாடும் 3 வீரர்களுக்கு பதில் மாற்று வீரர்கள் அறிவிப்பு

நவம்பரில் என்னை அழைத்ததற்கு நன்றி ரோஹித் : ராகுல் டிராவிட்

பெரில் புயல் காரணமாக விமான நிலையம் மூடல்: பார்படாஸில் இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து தவிப்பு