அகமதாபாத்: ஐபிஎல்லில் புதிதாக களம் இறங்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஜெர்சி அறிமுக விழா அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியதாவது: எங்கள் அணியின் அனைத்து வீரர்களும் வீட்டில் இருக்கும் ஒரு கலாச்சாரத்தை உருவாக்க விரும்புகிறோம். அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வை வழங்க விரும்புகிறோம். அப்போது தான் அவர்களிடம் இருந்து சிறந்ததை பெற முடியும். அவர்கள் இங்குள்ளவர்கள் (இந்தியர்கள்) என்ற உணர்வு ஏற்படுத்த விரும்புகிறோம். ஆஷிஷ் நெஹ்ராவுடன் பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருடன் நேரத்தை செலவிடுவதில் நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். ஐபிஎல்லில் எனது பந்து வீச்சு ஒரு சர்ப்ரைஸ் (ஆச்சரியமாக) ஆக இருக்கும், என்றார்….