ஐடி நிறுவன ஊழியர் விபத்தில் பலி

பல்லாவரம்: சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் கிரண் குமார் (23). ஐ.டி நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு தாம்பரம்- மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக தனது விலை உயர்ந்த பைக்கில், தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அனகாபுத்தூர் மேம்பாலம் அருகே வந்தபோது திடீரென நிலைதடுமாறி சாலை தடுப்பில் பைக் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட கிரண்குமார் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், கிரண்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தலைக்கவசம் அணியாமல் பைக்கை இயக்கியதே உயிரிழப்பிற்கு காரணம் என்று போலீசார் தெரிவித்தனர்….

Related posts

மாதவரத்தில் கனமழை காரணமாக வீடுகளை கழிவுநீர் சூழ்ந்தது: மின்தடையால் மக்கள் தவிப்பு

புழல் அருகே மாசடைந்த கால்வாய்

அதிவேக உயிர்காக்கும் நடவடிக்கையாக காவேரி மருத்துவமனையில் இதய அதிர்ச்சி சிகிச்சை குழு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்