ஐகோர்ட் கிளையில் அரசு தகவல் ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் காய்ச்சல் பரிசோதனை முகாம்

வேலாயுதம்பாளையம், டிச.23: வேலாயுதம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் புகழூர் நகராட்சி எதிரே நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தலைமையில், செவிலியர்கள் மற்றும் சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு பல்வேறு பரிசோதனை செய்தனர். முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்து ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு மற்றும் உடல் பரிசோதனை, தலைவலி, காய்ச்சல், உடல் வலி, சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்து அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்கினர். முகாமில்ம கலந்து கொண்டவர்களுக்கு பல்வேறு ஆலோசனை வழங்கினர். முகாமில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை