Friday, July 5, 2024
Home » ஐஐடி, ஐஐஎம் போன்ற நிறுவனங்களில் பயில முன்னாள் படைவீரர் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை: சென்னை கலெக்டர் தகவல்

ஐஐடி, ஐஐஎம் போன்ற நிறுவனங்களில் பயில முன்னாள் படைவீரர் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை: சென்னை கலெக்டர் தகவல்

by kannappan

சென்னை: ஐஐடி, ஐஐஎம் போன்ற நிறுவனங்களில் பயில்வதை ஊக்குவிக்க முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்படுவதாக சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: 2022-2023-ம் ஆண்டு முதல் உயர்கல்வியான ஐஐடி, ஐஐஎம், நேஷ்னல் லா ஸ்கூல் போன்ற நிறுவனங்களில் பயில்வதை ஊக்குவிக்கும் பொருட்டு முன்னாள் படைவீரர் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்குதல் மற்றும் முன்னாள் படைவீரர் மற்றும் அவர் தம் கைம்பெண்களுக்கு அவர் தம் குழந்தைகள் சைனிக் பள்ளியில் பயில்வதற்காக ஊக்கத் தொகையாக ஆண்டிற்கு ரூ.50,000 மற்றும் சைனிக் பள்ளிகளில் முன்னாள் படைவீரர்களின்குழந்தைகள் சேருவதை ஊக்குவிக்கும் பொருட்டு ஆண்டிற்கு ரூ.25,000 வழங்கிட தொகுப்பு நிதியின் மாநில மேலாண்மை குழுவால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு சென்னை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலக உதவி இயக்குநரை, 044-2235 0780 என்ற தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

You may also like

Leave a Comment

4 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi