Sunday, October 6, 2024
Home » ஏழை குடும்பங்களுக்கு அதிக பயன் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

ஏழை குடும்பங்களுக்கு அதிக பயன் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

by kannappan

நாகர்கோவில்:பெண் குழந்தைகளை பாரமாக கருதி அவர்களுக்கு கல்வி புகட்டுவதிலும், பணிக்கு அனுப்புவதிலும், திருமண செலவுகளுக்கு அஞ்சியும் அவர்கள் மீதிருந்த எதிர்மறையான எண்ணத்தை போக்கும் வகையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்பட்டது. சிறு குடும்ப நெறியை ஊக்கப்படுத்துதல், பாலின வேறுபாட்டை களைதல், ஏழை குடும்பங்களில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு பயனளிக்கும் வகையில் அரசு நேரடியாக வைப்புநிதி (டெபாசிட்) செய்து உதவி புரியும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் வாயிலாக பெண் குழந்தைகள் மேல்நிலை படிப்பில் இடைநிற்காமல் தொடர்ந்து படிக்கவும், இந்த திட்டத்தின் மூலம் பெறும் முதிர்வு தொகையை பயன்படுத்தி உயர் கல்வி பயிலுகின்ற நிலையை ஏற்படுத்தவும் பெற்றோரின் நிதிச்சுமையை குறைக்கவும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  மேலும் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த உடன் குடும்ப கட்டுப்பாடு செய்திட பெற்றோரை ஊக்குவித்தல், பெண் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாத்தல், பெண் குழந்தைகளுக்கு சமூக பொருளாதார அதிகாரம் வழங்குதல், பெண் குழந்தைகளின் நிலையை மேம்படுத்த குடும்பத்தினரின் பங்கை உறுதி செய்தல், பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கையை அதிகரித்தல், இடைநிற்றலை, தவிர்த்தல், குறைந்தபட்சம் 10ம் வகுப்பு வரை கல்வி பயில ஊக்குவித்தல், 18 வயதிற்கு பின்னரே திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்ைத பெண் குழந்தைகளிடம் உருவாக்கி குழந்ைத திருமணங்களை தவிர்த்தல் உள்ளிட்ட நோக்கங்கள் இதில் அடங்கியுள்ளன.திட்டத்திற்கான தகுதிகள்:  திட்டம்- 1 :ஒரு பெண் குழந்தை மட்டும் – ஆண் வாரிசு இருக்கக் கூடாது. பெற்றோரில் ஒருவர் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். குழந்தையின் வயது 3க்குள் இருக்க வேண்டும். குழந்தையின் பெயரில் ரூ.50000 வைப்பீடு செய்யப்படும்.திட்டம் -2 : இரண்டு பெண் குழந்தை மட்டும் – ஆண் வாரிசு இருக்கக் கூடாது. பெற்றோரில் ஒருவர் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். இரண்டாவது குழந்தைக்கு 3 வயதிற்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் ரூ.25000 வைப்பீடு செய்யப்படும். திட்டம்- 3 : பெற்றோர்கள் ஒருவர் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். ஆண் வாரிசு இருக்க கூடாது. முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தையும், இரண்டாவது பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தை பிறந்திருந்தால் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் ரூ.25000 வைப்பீடு செய்யப்படும். இத்திட்டத்தில் பயன் பெறுவதற்கான தகுதிகள்.  1. 35 வயதுக்குள் பெற்றோரில் ஒருவர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும்.2. குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். 3. ஆண் குழந்தை இருக்கக் கூடாது. பின்னாளில் ஆண் குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளவும் கூடாது. 4. விண்ணப்பிக்கும் போது குழந்தைகளின் பெற்றோர்கள் தமிழகத்தில் பத்தாண்டுகள் வசித்தவராக இருத்தல் வேண்டும். 5. திட்டம்- 1ன் கீழ் ஒரு பெண் குழந்தை மட்டும் இருப்பின் அக்குழந்தை பிறந்த 3 ஆண்டிற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.6. திட்டம்- 2ன் கீழ் இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் எனில், இரண்டாவது குழந்தை பிறந்த ஆண்டிற்குள் விண்ணப்பிக்க வேண்டும். 7. ஆண்டு வருமானம் ரூ.72,000க் மிகாமல் இருத்தல் வேண்டும். இணைக்க வேண்டிய சான்றுகள்:  1. பிறப்புச் சான்று ( வட்டாட்சியர் அலுவலகம் அல்லது நகராட்சி அலுவலகம்)2. பெற்றோரின் வயது சான்று (பிறப்புச் சான்று அல்லது பள்ளிச்சான்று அல்லது அரசு மருத்துவரின் சான்று) 3. குடும்ப நல அறுவை சிகிச்சை சான்று (சம்பந்தப்பட்ட அரசு அல்லது  தனியார் மருத்துவமனை) 4. வருமான சான்று (வட்டாட்சியர் அலுவலகம்) 5. ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்று (வட்டாட்சியர் அலுவலகம்) 6. இருப்பிடச் சான்று  வட்டாட்சியர் (விண்ணப்பிக்கும் போது பெற்றோர் அல்லது அவர்களது பெற்றோர் 10 ஆண்டுகள் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்)   மேற்காணும் விவரங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பித்தும், அசல் விண்ணப்பத்தினை சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன் பெறலாம்.* முதிர்வுதொகை திரும்ப பெறும் வழிமுறை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை நிதி மேம்பாட்டு நிறுவனத்தில் இத்திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளின் பெயரில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மாதம்தோறும் திரளும் வட்டியுடன் கூடிய தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் வைப்புநிதி முதலீடு செய்யப்படுகிறது. இந்த வைப்பு ெதாகை ஒவ்வொரு ஐந்தாண்டு முடிவிலும் புதுப்பிக்கப்பட்டு 18 வயது நிறைவடைந்ததும் வட்டியுடன் கூடிய முதிர்வு தொகை அப்பெண் குழந்தைக்கு வழங்கப்படுகிறது. இப்பயனை அடைய பெண் குழந்தை 10ம் வகுப்பு வரை படித்து பொதுத்தேர்வு எழுதியிருத்தல் வேண்டும். முதலமைச்சரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பித்து வைப்புநிதி பத்திரம் பெற்றுள்ளவர்கள் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் மாவட்ட நிர்வாகத்தால் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் போது ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், மண்டல அலுலகங்களில் உள்ள சமூக நல விரிவு அலுவலர், மகளிர் ஊர் நல அலுவலர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும்.* சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் 1. வைப்புநிதி அசல் /நகல்2. பயனாளியின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்3. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் பட்டியல்.4. பயனாளி பெயரில் தனி வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்….

You may also like

Leave a Comment

18 − fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi