திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூன் மாதம் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரையிலான ₹300 சிறப்பு தரிசனத்துக்கான டிக்கெட்டுகள், இன்று காலை 9 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும், கடந்த மார்ச் மாதத்தில் நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் டிக்கெட் வழங்கப்பட்டு வந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை பரவல் காரணமாக நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே வெளியிட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இந்த ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்களை http//tirupathibalaji.ap.gov.in என்ற தேவஸ்தான இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர்….