ஏழாயிரம்பண்ணை, மார்ச் 24: விருதுநகர் மாவட்டம், தாயில்பட்டி, ஏழாயிரம் பண்ணை, சுப்பிரமணியபுரம், விஜயகரிசல்குளம், உள்ளிட்ட பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பதாக ஏழாயிரம்பண்ணை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ஏழாயிரம்பண்ணை எஸ்ஐ செண்பகவேலன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஏழாயிரம்பண்ணை அருகே பனையடிப்பட்டி சாலையில் உள்ள காட்டுப்பகுதிக்குள் சோதனை செய்தனர். அந்த சோதனையின் போது அரசு அனுமதியில்லாமல் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான பட்டாசு மற்றும் வெடி மருந்துபொருட்கள் ஆகியவை பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார்,அதே பகுதியை சேர்ந்த ஏசுதாஸ், வைரமுத்து ஆகியோரை கைது செய்தனர்.