ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான இணையதள முகப்பில் திருத்தம் செய்து 78 லட்சம் மோசடி: டெல்லியை சேர்ந்த 2 பேர் கைது

சென்னை:   ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான இணையதள முகப்பில் திருத்தம்செய்து ₹78 லட்சம் மோசடி செய்த டெல்லியை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை தி.நகரை சேர்ந்த தொழில் முனைவோர் ஒருவர், சென்னை காவல் ஆணையரிடத்தில் அளித்த புகாரில், ‘நான் வெளிநாடுகளுக்கு துணி வகைகள் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறேன். அதற்கென மத்திய அரசின் வெளிநாட்டு வணிகம் தொடர்பான டிஜிஎப்டி இணையதள முகப்பில்  கணக்கு வைத்துள்ளேன். மேலும், அரசாங்கம் எனக்கு அளித்திருந்த இன்சென்டிவ் பாயின்ட்களை எனது அக்கவுன்டில் இருந்து மற்றொரு அக்கவுன்டிற்கு மாற்றியபோது, இணையதள முகப்பில் திருத்தம் செய்து, எனது அக்கவுன்டில் இருந்து 78,32,444 ரூபாயை மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்று கூறியிருந்தார். இந்த புகார் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர், மத்திய குற்றப்பிரிவிற்கு உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவு உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் டிஜிஎப்டி போர்டல் ஐ.பி விவரங்கள், மோசடி நபர்களால் மாற்றியமைக்கப்பட்ட மொபைல் எண், இமெயில் ஐடியின் ஐ.பி விவரங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து, குற்றவாளி குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன. அதில், குற்றவாளிகள் டெல்லியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் டெல்லி சென்று, மோசடியில் ஈடுபட்ட அருண்குமார் (41) மற்றும் சச்சின் கார்க் (43) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இருவரிடமிருந்தும் குற்றச்செயலுக்கு பயன்படுத்திய 2 லேப்டாப்கள், 9 செல்போன்கள், 1 பென்டிரைவ் மற்றும் 6 சிம்கார்டுகள்  கைப்பற்றப்பட்டன. இந்த குற்றத்திற்கு மூளையாக செயல்பட்ட பர்வீன் அகர்வால், மனிஷ் அகர்வால் ஆகிய இருவரும் இதேபோன்ற மற்றொரு வழக்கில் ஹரியானா மாநில காவல்துறையால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதால் இருவரும் விரைவில் கைது செய்யப்படுவர்கள். கைது செய்யப்பட்ட அருண்குமார் மற்றும் சச்சின் கார்க் ஆகிய இருவரும் நேற்று சென்னை அழைத்து வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். …

Related posts

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்

பள்ளியில் பிளஸ் 2 மாணவிக்கு தாலி கட்டிய சக மாணவன்: உடந்தையாக இருந்த 3 மாணவர்கள் சஸ்பெண்ட்