சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி இன்று மாலையுடன் நிறைவுபெறுகிறது. கடந்த 25ம் தேதி தொடங்கிய கோடை விழாவை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்காடு கோடைவிழா நடத்தப்படாமல் இருந்ததால் இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. …