ஏர்போர்ட் பகுதியில் குட்கா விற்ற பெண் கைது

 

திருச்சி, ஜூலை 22: திருச்சி ஏர்போர்ட் பகுதியில் அரசு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் அதிகாரிகள் ஏர்போர்ட் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது குளவப்பட்டி சாலை கலைஞர் நகர் பகுதியில் புவனேஸ்வரி (42) என்பவர் கடையில் அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரி சையது இப்ராஹிம் ஏர்போர்ட் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து புவனேஸ்வரியை கைது செய்து அவரிடமிருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

 

Related posts

தூய்மை பணியாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

திருவாடானை அருகே புதிய ரேஷன் கடை கட்டுமானப் பணி ஸ்பீடு

செப்.11ல் மக்கள் தொடர்பு முகாம்