ஏரியில் மூழ்கி மாணவன் பலி

பல்லாவரம்: குன்றத்தூர்  அடுத்த வடக்கு மலையம்பாக்கம், குமரன் நகரை சேர்ந்த நரேஷ்குமார் (18), போரூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் முதலாம் ஆண்டு  படித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் தனது நண்பரான  அதே பகுதியை சேர்ந்த முத்து பிரபு என்பவருடன் செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்க்க சென்றுள்ளார். அங்கு, 5ம் கண்  மதகு அருகே இருவரும் குளித்தபோது, ஆழமான பகுதிக்கு சென்ற நரேஷ்குமார் நீரில் மூழ்கினார். அவரை, முத்து பிரபு காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. தகவலறிந்து வந்த தீயணைப்பு  வீரர்கள்  2 நாட்களாக தேடி,நேற்று காலை நரேஷ்குமார் உடலை மீட்டனர். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை