ஏரியில் கிடந்த பைக்குகள் பறிமுதல்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் நேற்று பாக்குப்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். பாக்குப்பேட்டை ஏரிக்கரை அருகே அவர்கள் சென்றபோது அங்கு ஏரிக்கரையில் கேட்பாரற்று கிடந்த 8 மோட்டார் சைக்கிள்களை கண்டனர்.இதையடுத்து, அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாததால் அந்த 8 மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றி மணவாளநகர் காவல் நிலையம் கொண்டு வந்தனர். மேலும் போலீசார் அந்த மோட்டார் சைக்கிளில் இருந்த எண்களை கொண்டு அதன் உரிமையாளர்கள் யார் என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.  …

Related posts

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை போட்டு பாமகவினர் வீதி வீதியாக பிரசாரம்: கலாய்க்கும் நெட்டிசன்கள்