எஸ்.பி அலுவலக ஊழியரிடம் வழிப்பறி

ஆவடி: பட்டாபிராம் கந்தசாமி 3வது தெருவை சேர்ந்தவர் லோகநாதன்(50). இவர், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலக உதவியாளர்.  இந்நிலையில், நேற்று முன்தினம் லோகநாதன் திருவள்ளூரில் ஒரு திருமணத்திற்கு பைக்கில் சென்று விட்டு வரும் வழியில் வண்டலூர் – மீஞ்சூர் 400 அடி சாலை, கருணாகரச்சேரி சுரங்கப்பாதை அருகில் பைக்கை நிறுத்தி இயற்கை உபாதை கழித்து கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக ஒரே பைக்கில் 3 வாலிபர்கள் லோகநாதனை மிரட்டி அவரது கழுத்தில் கிடந்த 3 சவரன் தங்கச்சங்கிலியை பறித்து தப்பினர். புகாரின்பேரில் பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 வழிப்பறி ஆசாமிகளை தேடி வருகின்றனர்….

Related posts

கோவையில் 4 பேர் கும்பல் வெறிச்செயல் மர்ம உறுப்பை துண்டித்து வக்கீல் கொடூர கொலை: பெண் விவகாரமா? போலீஸ் விசாரணை

கலை நிகழ்ச்சி என அழைத்து சென்று பாலியல் தொழிலில் தள்ளிய கொடூரம்: உல்லாசத்துக்காக துபாய் சென்ற தமிழக விஐபிக்கள்

ரூ.12 லட்சம் கொள்ளை பணத்தில் பங்கு பிரிப்பு அடுத்தவர் மனைவியை அபகரித்து இன்ப சுற்றுலா சென்ற கொள்ளையன்