குமரி: களியக்காவிளையில் எஸ்.எஸ்.ஐ செலின்குமார் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ரவுடி கூட்டாளி கைது செய்யப்பட்டுள்ளார். ரவுடி விஜய் லாலின் கூட்டாளியான அருண்(20) என்பவரை அருமனை காவல்துறையினர் கைது செய்தனர். கஞ்சா வழக்கில் பிடிக்காமலிருக்க எஸ்எஸ்ஐ கவனத்தை திசை திருப்பும் நோக்கில் பெட்ரோல் குண்டு வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்லால் ஏற்பாட்டின் பேரில் எஸ்எஸ்ஐ வீட்டின் வளர்ப்பு நாயையும் விஷம் வைத்து கொன்றது அம்பலமானது….