எழும்பூர், ஆவடி, பெரம்பூர் கோட்டங்களில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் : நாளை நடக்கிறது

சென்னை, ஜன.4: எழும்பூர், ஆவடி, பெரம்பூர் கோட்டங்களில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடைபெறுகிறது, என மின்வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எழும்பூர் கோட்டத்திற்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், செயற் பொறியாளர், எழும்பூர் கோட்ட அலுவலகம், 110 கி.வோ துணை மின் நிலைய வளாகம், எண்.47, குக்ஸ் ரோடு, மலையப்பன் தெரு (ஓட்டேரி காவல் நிலையம் அருகில்), ஓட்டேரி, சென்னை-12 என்ற முகவரியில் நாளை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதேபோல், ஆவடி கோட்டத்திற்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், செயற் பொறியாளர், ஆவடி கோட்ட அலுவலகம், 1வது தளம், எண்.229, என்.எம். சாலை, ஆவடி என்ற முகவரியிலும், பெரம்பூர் கோட்டத்திற்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், செயற் பொறியாளர், பெரம்பூர் அலுவலகம், 110 கி.வோ செம்பியம் துணை மின் நிலைய வளாகம், எம்.இ.எஸ் ரோடு, (சிம்சன் எதிரில்) சென்னை என்ற முகவரியிலும் நாளை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை