எலக்ட்ரிக் கடையில் திருட்டு

வெள்ளக்கோவில்,மே12: ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சந்திரன்சிங்(27) வெள்ளக்கோவில் பகுதியில் குடியிருந்துகொண்டு, வெள்ளக்கோவில் கோவை சாலையில் எலக்ட்ரிக் கடை வைத்துள்ளார். வழக்கம் போல நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் வியாபாரம் முடிந்து கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்று விட்டார். நேற்று காலையில் அருகிலிருந்தவர்கள் பார்த்து கடை ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். கடைக்குச் சென்று பார்த்த போது மின்சார வயர்கள்,சுவிட்ச் பெட்டிகள்,ஆழ்குழாய்க் கிணறு குழாய்கள் உள்ளிட்ட பொருள்கள் ரூ.25 ஆயிரம் மதிப்பில் திருட்டுப் போயிருந்தது. மேலும் கடையின் மேஜை டிராயரைத் திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.10 ஆயிரம் பணமும் திருடப்பட்டது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில், வெள்ளக்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை