எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் அக்.31ல் நடக்கிறது

மதுரை, அக்.28: மதுரை மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் அக்.31ம் தேதி பிற்பகல் 4.30 மணிக்கு நடக்கிறது. கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் எண்ணெய் நிறுவன மேலாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், எரிவாயு நுகர்வோர், எரிவாயு முகவர்கள் மற்றும் தொழிலாளர் நல ஆய்வாளர், அனைத்து குடிமை பொருள் வட்டாட்சியர்கள் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். எனவே, மாவட்டத்தில் சமயைல் எரிவாயு சிலிண்டர்கள் பயன்படுத்தும் பொதுமக்கள் இக்குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது பிரச்னைகளை தெரிவித்து அவற்றை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். இத்தகவல் மாவட்ட வழங்கல் மறறும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்