எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

 

மதுரை, ஜூலை 20: மதுரை மாவட்டத்தில் வசிக்கும் எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் நாளை (ஜூலை 21) பிற்பகல் 4.30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் தலைமை வகிக்கிறார். இதில், எண்ணெய் நிறுவன மேலாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்க தலைவர்கள், எரிவாயு நுகர்வோர்கள், எரிவாயு முகவர்கள் நுகர்வோர் அமைப்பினர் மற்றும் தொழிலாளர் நல ஆய்வாளர், அனைத்து குடிமை பொருள் வட்டாட்சியர்கள் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இக்கூட்டத்தில், மாவட்டத்தில் வசிக்கும் சமையல் எரிவாயு உருளைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் கலந்து கொண்டு, எரிவாயு கொள்முதல், சேவை உள்ளிட்டவற்றில் ஏதேனும் புகார்கள் இருந்தால் அவற்றை நேரிலோ அல்லது மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம் என மாவட்ட வழங்கல் அலுவலர் முருகசெல்வி தெரிவித்துள்ளார்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை