சென்னை: என் கருணையை பலவீனமாக நினைக்க வேண்டாம் என நெட்டிசன்களை நடிகை சமந்தா கடிந்துகொண்டார். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து மணந்தவர் சமந்தா. பிறகு இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு பிரிந்தனர். இந்நிலையில் இந்த பிரிவை வைத்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை சமூக வலைத்தளத்தில் பரப்பி வந்தனர். இதையெல்லாம் படித்து சமந்தா கொதித்துப் போயிருந்தார். ஆனால், அவர் வாய் திறக்காமல் இருந்தார். இந்நிலையில் இப்போது இது பற்றி அவர் டிவிட்டரில் கூறியிருப்பதாவது: எனது மெளனம் மற்றும் அறியாமையை யாரும் தவறாக நினைத்துவிட கூடாது. எனது அமைதி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. எனது கருணையை யாரும் எனது பலவீனமாக நினைத்து விடக்கூடாது. கருணையும் ஒருநாள் காலாவதி ஆகும். இவ்வாறு சமந்தா கூறியிருக்கிறார்….