தக்கலை, ஜூலை 12: குமாரகோவில் நூருல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களிடம் தன்னம்பிக்கை கருத்துக்களை உருவாக்கும் வகையில் புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் ஏ.பி. மஜீத்கான் தலைமை வகித்தார். கல்லூரி தலைவர் பைசல்கான் முன்னிலை வகித்தார். வெற்றிப்படிகளை அடைய, விடா முயற்சியும், தன்னம்பிக்கையும், தொலைநோக்கு சிந்தனையும் விதைக்கின்ற வகையில் வாழ்வியல் அனுபவங்களில் இருந்து சிறப்புரையினை எழுத்தாளர் குமரி ஆதவன் வழங்கினார். அறிமுக உரையினை முனைவர் பத்மதேவி வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் மாரிமுத்து வரவேற்றார். முனைவர் ராஜலெட்சுமி நன்றி கூறினார்