எண்ணூரில் தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத நபர் அடித்துக்கொலை: போலீசார் விசாரணை

 

திருவொற்றியூர், ஏப். 7: எண்ணூர் அன்னை சிவகாமி நகர், ரயில்வே தண்டவாளம் அருகே காலி இடத்தில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எண்ணூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அடையாளம் தெரியாத ஆண் சடலம், சிதைந்து அழுகிய நிலையில் கற்களால் மூடப்பட்டு கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் கற்களை அகற்றி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த நபரை 15 நாட்களுக்கு முன் யாரோ அடித்து கொலை செய்து வெளியில் தெரியாமல் இருப்பதற்காக உடல் மீது கற்களை போட்டு மூடி வைத்து சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட நபர் யார், எந்த ஊர் என்ற விவரம் தெரியவில்லை. இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை