சேலம்: சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுக நிர்வாகிகளை செல்போனில் தொடர்பு கொண்டு சசிகலா பேசி வருகிறார். அவர்களிடம் இனிமேலும் வேடிக்கை பார்க்க மாட்டேன், கட்சியை கைப்்பற்றுவேன் என்று கூறி ஆதரவு திரட்டி வருகிறார்.இதனால் அதிர்ச்சியடைந்த எடப்பாடி பழனிசாமி, சசிகலாவுடன் பேசியவர்களை அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கி வருகிறார்.இந்நிலையில், அமமுகவை சேர்ந்த திருவள்ளுர் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பொன்.ராஜா, மத்திய சென்னை மத்திய மாவட்ட செயலாளர் சந்தானகிருஷ்ணன், வடசென்னை மத்திய மாவட்ட செயலாளர் லட்சுமி நாராயணன் ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி, சேலத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், ‘‘ அமமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக அதிமுகவுக்கு இழுக்கும் பட்சத்தில் சசிகலாவின் ஆட்டம் தானாகவே முடிவுக்கு வரும். இனி அமமுக முக்கிய நிர்வாகிகள் அணிவகுத்து அதிமுகவில் இணைவார்கள்,’’ என்றனர்….