எடப்பாடி தொகுதியில் 7-வது முறையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி: எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் 7-வது முறையாக போட்டியிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். எடப்பாடியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். எடப்பாடி தொகுதியில் இதுவரை 6 முறை போட்டியிட்டு 4 முறை எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார். 1989-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக எடப்பாடி தொகுதியில் போட்டியி்ட்டார். 1989-ல் எடப்பாடி தொகுதியில் ஜெயலலிதா அணியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1991, 2011, 2016 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார். 1996, 2006 தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இன்று சேலம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் அலுவலகத்தை முதல்வர் திற்ந்து வைத்தார். அலுவலகத்தை திறந்து வைத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். …

Related posts

ஆர்எஸ்எஸ் எப்போதும் அரசியலமைப்புக்கு எதிரானது: வெளிநடப்புக்கு பின் கார்கே விமர்சனம்

மக்களவையில் ஆவேச பேச்சு; ராகுல் காந்தி மீது நடவடிக்கை?: ஒன்றிய அமைச்சர் கருத்தால் பரபரப்பு

வெளிநடப்பு விவகாரத்தில் இந்தியா கூட்டணிக்கு பிஜூ ஜனதா தளம் ஆதரவு: பாஜ பக்கம் சாய்ந்தது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்