சென்னை: அதிமுகவிற்கு பிடித்துள்ள நோய் பழனிசாமி, அதற்கான மருந்து தான் ஓபிஎஸ் என மனோஜ் பாண்டியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் யார் உண்மையான அ.தி.மு.க. என்ற சண்டை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இடையே நீடித்து வருகிறது. பரபரப்பான இந்த சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை சென்னையில் இன்று காலை 10 மணிக்கு கூட்டினார். சென்னை வேப்பேரி ரிதர்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் இந்த் கூட்டம் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் பேசிய மனோஜ் பாண்டியன்; ஒற்றைத் தலைமை வேண்டாம் சட்டச்சிக்கல் வரும் என்று அன்றே சொன்னேன். ஆனால் அதையெல்லாம் கேட்காமல் கட்சியை இப்பேர்ப்பட்ட இக்கட்டான சூழலுக்கு தள்ளியவர் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவிற்கு பிடித்துள்ள நோய் பழனிசாமி, அதற்கான மருந்து தான் ஓபிஎஸ். அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்றியனைய வேண்டும். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தால் எடப்பாடி பழனிசாமியை நீக்கிவிடலாம். நாங்கள் எதிர்க்கட்சி தொடங்கினால் எடப்பாடி அணியே இருக்காது. எடப்பாடி பழனிசாமியிடம் இருப்பது டெண்டர் படை, ஓ.பன்னீர்செல்வத்திடம் இருப்பது தொண்டர் படை. அதிமுக நம் அனைவரின் சொத்து. ‘எனக்கு ஒரு ஆசை… அண்ணன் ஓ.பி.எஸ். ஆட்சிக்கு வந்த பிறகு, கூவத்தூரில் என்ன நடந்தது என விசாரிக்க தனி கமிஷன் அமைக்க வேண்டும்; விசாரித்து அனைவரையும் கைது செய்ய வேண்டும். ஒன்றிணைய ஒத்துழைக்காத இ.பி.எஸ்-ஐ கழித்துவிட்டு அனைவரும் ஒன்றிணைவோம் இவ்வாறு கூறினார். …