எச்ஐவி விழிப்புணர்வு

திண்டுக்கல், ஆக. 24: திண்டுக்கல் அருகே தோட்டனூத்து ஊராட்சி அலுவலகத்தில் எச்ஐவி புதிய தொற்று இல்லா கிராமம் திட்டத்தின் கீழ் மறு சீரமைப்பு வரைபடம் வரைதல்ல விழிப்புணர்வு திட்டமிடுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.ஊராட்சி தலைவர் சித்ரா ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து துவங்கி வைத்தார். ஊராட்சி செயலாளர் நாகராஜ், சுகாதார ஆய்வாளர் சண்முகம், காசநோய் பிரிவு ரமணி, விஏஓ அரவிந்த், நம்பிக்கை மையம் ஆலோசகர் சூர்யா முன்னிலை வகித்தனர். தனியார் தொண்டு நிறுவன இயக்குநர்கள் கலையரசி, அசோக் எய்ட்ஸ் சமூக பரவல், புதிய நோயாளிகள் உருவாகா வண்ணம் தடுத்தல் குறித்து விளக்கி பேசினர். தொடர்பு பணியாளர் ரேவதி நன்றி கூறினார்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்