எங்கள் ஓட்டுகள் திமுகவுக்கு தான்: எஸ்.ஆர்.ராஜாவிடம் மக்கள் உறுதி

தாம்பரம்: தாம்பரம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜா, தொகுதி முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, தாம்பரம் நகராட்சி 3வது வார்டை சேர்ந்த நலச்சங்க நிர்வாகிகளை சந்தித்து வாக்கு சேகரித்தார்.  அப்போது பேசிய எஸ்.ஆர்.ராஜா, ‘‘2 முறை தாம்பரம் நகர மன்ற தலைவராக இருந்த போதும், 2 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதும், தாம்பரம் தொகுதிக்கு நான் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்து,  மக்களின்  கோரிக்கைகளை நிறைவேற்றி உள்ளேன்,’’ என்றார். அதற்கு நல சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், நீங்கள் பொறுப்பில் இருந்தபோது, தாம்பரம் தொகுதிக்கு செய்த பல்வேறு வளர்ச்சி திட்டங்களை நாங்கள் அறிவோம். எங்களுக்கு இந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எந்த ஒரு  நன்மைகளும் கிடைக்கவில்லை. எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் நாங்கள் அனைவரும் திமுகவிற்கு தான் வாக்களிப்போம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார். எங்கள் ஓட்டு உங்களுக்கு மட்டுமே என  தெரிவித்தனர். மேலும், அப்பகுதியில் தண்ணீர் தொட்டி ஒன்றும், தாம்பரம் நீதிமன்றம் அருகில் குறுகிய அளவில் உள்ள சாலையை விரிவுபடுத்தி தரவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று திமுக  ஆட்சி அமைந்தவுடன் உங்கள் கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றித் தருவேன், என அவர் வாக்குறுதி அளித்தார்.பிரசாரத்தின்போது திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர்….

Related posts

பிரதமர் குறித்த கார்கேவின் கருத்து வெறுக்கத்தக்கது: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கண்டனம்

தமிழகம் முழுவதும்; நாளை முதல் 9ம் தேதி வரை தேசிய விழிப்புணர்வு நடைபயணம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

பகுஜன் சமாஜ் கட்சி புகாரை ஏற்க மறுப்பு; விஜய் கட்சிக்கு தேர்தல் ஆணையம் புதிய அனுமதி