ஊராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல்

 

சிவகாசி, ஜூலை 17: சிவகாசி அருகே ஊராட்சி தலைவருக்கு கொலைமிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகாசி அருகே செங்கமல நாச்சியார்புரம் ஊராட்சி தலைவர் கருப்பசாமி(54). இவரது மனைவியின் உறவினர் வள்ளியம்மாள் என்பவர் இறந்ததை தொடர்ந்து, அவர் வீட்டை கேட்டு, இவருக்கும் ராஜேந்திரனுக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில் ராஜேந்திரன், கருப்பசாமி வீட்டிற்கு வந்து அவதூறாக பேசி அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து திருத்தங்கல் போலீசில் கருப்பசாமி புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

துறையூர் மூங்கில் தெப்பக்குளம் காசி விஸ்வநாதர் சிவன் கோயில் கும்பாபிஷேகம்

திருச்சி அண்ணா நகர் கிளையில் கூட்டுறவு துறை பணியாளர் நாள்

திருவெறும்பூர் அருகே ஆட்டோவில் கஞ்சா விற்ற 2 பேர் கைது