ஊராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல்

 

விருத்தாசலம், ஆக. 27: விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் அருகே உள்ள பெருந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் மனைவி லதா(43). இவர் அக்கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார். இவர் கடந்த 21ம் தேதி அப்பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி பணியாளர்களுக்கு சம்பளம் கொடுத்துக் கொண்டிருந்தபோது அங்கு போதையில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ்(34) என்பவர் லதாவை அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் இதனை தட்டி கேட்ட லதாவின் கணவர் சந்திரசேகரனையும் திட்டி தாக்கியுள்ளார். இது குறித்து லதா கொடுத்த புகாரின்பேரில், கம்மாபுரம் போலீசார் வழக்கு பதிந்து ஆனந்தராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்