ஊராட்சி அலுவலகம் முன்பு காலிக்குடங்களுடன் மக்கள் போராட்டம்

 

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரம் ஊராட்சி 6, 7 வார்டுகளை சேர்ந்த மக்கள் காலிக்குடங்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நேற்று ஊராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க வேண்டும். கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தெருக்களில் உள்ள வாறுகாலை சுத்தம் செய்ய வேண்டும். குப்பைகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தங்கேஸ்வரன் தலைமை வகித்தார். தாலுகா செயலாளர் பெனரி, தாலுகா குழு உறுப்பினர்கள் ஜீவானந்தம், பழனிச்சாமி, விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் தங்கபாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related posts

பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம் பட்டியல் தயாரிக்க உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில்