Sunday, June 30, 2024
Home » ஊரடங்கு விதி மீறல்: முகக்கவசம் அணியாத 769 பேர் மீது வழக்கு..! போலீசார் நடவடிக்கை

ஊரடங்கு விதி மீறல்: முகக்கவசம் அணியாத 769 பேர் மீது வழக்கு..! போலீசார் நடவடிக்கை

by kannappan

சென்னை: கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக 233 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 251 வாகனங்கள் பறிமுதல் ெசய்யப்பட்டது. மேலும் முகக்கவசம் அணியாத 769 பேர் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காத 9 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், முறையான தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு பணிகளை தீவிரபடுத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில், சென்னையில் உள்ள 12 காவல் மாவட்ட எல்லைகளில் 13 எல்லை வாகன தணிக்கை சாவடிகள் மற்றும் அனைத்து காவல் நிலைய எல்லைகளில் வாகன தணிக்கை சாவடிகள் அமைத்து கண்காணித்து. அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக போலீசார் நேற்று நடத்திய வாகன சோதனையில் ஊரடங்கு தடையை மீறியது தொடர்பாக 233 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றியது தொடர்பாக 233 இருசக்கர வாகனங்கள், 14 ஆட்டோக்கள் மற்றும் 4 இலகு ரக வாகனங்கள் என மொத்தம் 251 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், முகக்கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக 769 வழக்குகளும், சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 9 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது….

You may also like

Leave a Comment

four × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi