தமிழகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் கடந்த ஏப்ரல் மாதம் துவங்கியது.தொடர்ந்து வேகம் எடுத்த நிலையில், மே மாதம் 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும், ஒரு சில மாவட்டங்களில் பாதிப்பு குறையாமல் இருந்தது. குறிப்பாக, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பாதிப்பு குறையாமல் இருந்ததால், ஊரடங்களில் தளர்வுகள் அளிக்கப்படவில்லை. மளிகை கடைகள், காய்கறி மற்றும் இறைச்சிக் கடைகள் மட்டுமே திறக்க தமிழக அரசு அனுமதியளித்தது. இதனால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த 11 மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை குறைய துவங்கியதை தொடர்ந்து படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டன. நேற்று முதல் பல்வேறு கடைகளும் திறக்க அனுமதியளிக்கப்பட்டது. குறிப்பாக, தேநீர் கடைகள், சலூன்கள் மற்றும் அழகு நிலையங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டதால், பொதுமக்கள் நகர் பகுதிகளுக்கு வரத் துவங்கினர். இதனால், வழக்கமான நிலைக்கு ஊட்டி நகரம் திரும்பியது. அனைத்து கடைவீதிகள் மற்றும் சாலைகளில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. எனினும், துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் திறக்க இன்னும் அனுமதியளிக்கப்படாத நிலையில் மெயின் பஜார் மற்றும் கம்சியல் சாலையில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன….