ஊரடங்கால் நிறுத்தப்பட்ட கீழடி அகழாய்வு பணி மீண்டும் தொடக்கம்

திருப்புவனம்: கீழடியில் கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட அகழாய்வு பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் கடந்த பிப்.13ம் தேதி தமிழக தொல்லியல் துறை சார்பில் 7ம் கட்ட அகழாய்வு பணி தொடங்கியது. இதேபோல் கீழடி அருகே உள்ள அகரம், கொந்தகை, மணலூரிலும் அகழாய்வு பணிகள் நடந்து வந்தன. கீழடியில் 5 குழிகள், கொந்தகை, அகரத்தில் தலா 3 குழிகள், மணலூரில் 2 குழிகள் தோண்டப்பட்டன. அகழாய்வில் சுடுமண் பகடை, கல்உழவு கருவி, பாசி, மணிகள், மூடியுடன் கூடிய பானை உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தன. தமிழகம் முழுவதும் கடந்த மே 10ம் தேதியில் இருந்து முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அகழாய்வு பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது முழு ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் 27 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் பணிகள் தொடங்கின. முதற்கட்டமாக, அகழாய்வு குழிகள் மீது மூடப்பட்டிருந்த தார்ப்பாய்களை அகற்றி இடத்தை சுத்தம் செய்யும் பணி நடந்தது. இன்று முதல் அகழாய்வு தளத்தில் பணிபுரியும் அனைவரையும் அலுவலர்கள் வர சொல்லியுள்ளனர். எனவே மீண்டும் பணிகள் முழு வீச்சில் தொடங்க உள்ளது….

Related posts

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!