ஊத்தங்கரை நகரில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் பாதிப்பு

ஊத்தங்கரை: ஊத்தங்கரை ரவுண்டானா பகுதியில், பீக் ஹவர்ஸ் எனப்படும் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஊத்தங்கரை ரவுண்டானா பகுதியானது, கிருஷ்ணகிரி – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை, சேலம் – வேலூர் தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் வாகனங்களால், நகருக்குள் வரும் டூவீலர், கார் போன்றவை போக்குவரத்து நெரிசலில் சிக்குகிறது. கடும் நெரிசலை கட்டுப்படுத்த ஊத்தங்கரை ரவுண்டானாவில் சிக்னல் அமைத்து, போக்குவரத்து போலீசாரை பணியமர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை