ஊத்தங்கரை அருகே கோயில் உண்டியல் உடைப்பு

ஊத்தங்கரை, ஆக.30: ஊத்தங்கரை அடுத்த சென்னப்பநாய்க்கனூர் அருகே உள்ள வேடியப்பன் கோயிலில் மர்மநபர்கள் முன்பக்க இரும்பு கேட்டை அறுத்து உள்ளே புகுந்து, உண்டியல் மற்றும் கோயில் மணி உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே ஊத்தங்கரை சுற்று வட்டார பகுதிகளில் கோயில்களில் தொடர் திருட்டு நடைபெறுவதால், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்