ஊட்டி அருகே பாம்பு கடித்து மூதாட்டி பலி

 

ஊட்டி, ஆக.15: ஊட்டி அருகே தூனேரி பகுதியில் தேயிலை தோட்டத்தில் பாம்பு கடித்து மூதாட்டி பலியானார். ஊட்டி அருகே உள்ள தூனேரி கிராமத்தை சேர்ந்தவர் பாலன். இவரது தாய் சீத்து (75). இவர், அதே பகுதியில் உள்ள பாலனுக்கு ெசாந்தமான தேயிலை தோட்டத்தில் நேற்று முன்தினம் தேயிலை பறித்துக் கொண்டிருந்தார். அப்போது, இவரது காலை ஏதோ கடித்தது போல் உணர்ந்துள்ளார். உடனடியாக தேயிலை செடிக்கு அடியில் பார்த்தபோது ஒரு பாம்பு இருந்தது. இதனால், தன்னை பாம்பு கடித்துள்ளதை அருகில் பணிபுரிந்தவர்களிடம் கூறியுள்ளார்.

அவர்கள், உடனடியாக அவரை தூனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக அவரை ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதனை டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தேயிலை தோட்டத்தில் பணியாற்றி கொண்டு இருந்த மூதாட்டியை பாம்பு கடித்து உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை