ஊட்டியில் மிதமான காலநிலை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

 

ஊட்டி,மே31:ஊட்டியில் மேக மூட்டம் மற்றும் மழையால் மிதமான காலநிலை நிலவுவதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  சமவெளி பகுதிகளில் வெயில் வாட்டி வரும் நிலையில், நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கடந்த ஒரு மாதமாக ஊட்டியை முற்றுகையிட்டு வருகின்றனர். இம்முறை துவக்கத்தில் ஊட்டியிலும் வெயில் வாட்டி வந்தது.அதே சமயம் கடந்த 10ம் தேதி துவங்கி சில நாட்கள் மழை பெய்தது. பின், கடந்த ஒரு வாரமாக மழை குறைந்து காணப்பட்டது.வெயிலின் தாக்கமும் சற்று குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில், நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதனால், வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.மேலும், பகல் 12 மணிக்கு மேல் மழை பெய்தது. ஊட்டியில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு மேக மூட்டம் மற்றும் அவ்வப்போது மழை பெய்து வருவதால், தற்போது மிதமான காலநிலை நிலவுகிறது. சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கி தவிக்கும் சமவெளிப் பகுதி மக்கள் இந்த இதமான காலநிலையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை